Sunday, March 21, 2010

தமிழ் செய்தி


தாய்லாந்தில் மீண்டும் ரத்த ஆர்ப்பாட்டம்

தாய்லாந்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்றும் ஊர்வலமாகச் சென்றனர்.தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் ஆயிரக்கணக்கான சிவப்பு சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த இரு நாட்களாக பேங்காக்கில் மிகப்பெரிய ஊர்வலத்தை நடத்தினர்.ஆர்ப்பாட்டக்காரர்களின் இத்தகைய செயலால் பேங்காக் நகரமே ஸ்தம்பித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.பேங்காக் ஊர்வலத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் ரத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகப் பெரிய வெள்ளை நிறத் துணியில் மனித ரத்தத்தை பயன்படுத்தி அவர்கள் ஓவியங்களை வரைந்தனர்.சென்ற வாரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டக் காரர்கள் ரத்த தானம் மூலம் திரட்டிய ரத்தத்தில் இன்னும் 15 போத்தல்கள் மீதம் இருப்பதாகவும் அதனைப் பயன்படுத்தி ஓவியங்கள் வரையப் போவதாகவும் ஆர்ப்பாட்டத் தலைவர்கள் முன்னதாகக் கூறியிருந்தனர்.இத்தகைய ஓவியங்கள் வரைவதற்காகவே ஓவியர்களும் சிவுப்பு சட்டை ஆர்ப்பாட்டக் காரர்களும் வரவழைக்கப் பட்டதாக ஆர்ப்பாட்டக் காரர்களின் தலைவர் ஒருவர் கூறினார்.ஒரு பெரிய வெள்ளைத் துணியில் மனித ரத்தத்தைப் பயன்படுத்தி படங்கள் வரையவும் கவிதைகள் எழுதவும் அரசியல் வாசகங்கள் எழுதவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர்.“ஜனநாயகத்திற்காக நாங்கள் போராடுவதை உணர்த்துவதே இந்த ரத்த ஓவியப் போராட்டத்தின் நோக்கம்,” என்று ஆர்ப்பாட்டத் தலைவர்களில் ஒருவரான ஜடுபோர்ன் கூறினார்.தாய்லாந்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல் நடத்தப்படும் வரை தங்கள் போராட்டம் ஓயாது என்று ஆர்ப்பாட்டக் காரர்கள் கூறியுள்ளனர்.ஆர்ப்பாட்டக்காரர்களின் ரத்தப் போராட்டம் தங்கள் பொறுமையை சோதிப் பதாக தாய்லாந்துப் பிரதமர் அபிசித் விஜஜிவா கூறியுள்ளார்.அமைதியாக பேரணி நடத்துவதற்கு மட்டுமே அரசு அனுமதிக்கிறது என்றும் ரத்த ஆர்ப்பாட்டம் சட்டத்திற்கு புறம்பானது என்றும் அவர் கூறினார்.

தமிழ் முரசு(News)
yahoo.com(pict)

No comments:

Post a Comment