Monday, March 22, 2010

தமிழ் கதை

ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருங்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்,இளைஞ்சனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதணால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.இளைஞ்ஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.என் நண்பனே. நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆணால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார்.இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உன்டாக்கும் வடுவிற்கும், செயல்காளால் உன்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதைய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்,என்னை மன்னித்து விடு, நான் உன்னில் ஏதாவது வடுவை உன்டாக்கி இருந்தால்.


நன்றி
http://tamilparks.50webs.com/free_articles_publish/good_friend_story.html

Sunday, March 21, 2010

தமிழ் செய்தி


தாய்லாந்தில் மீண்டும் ரத்த ஆர்ப்பாட்டம்

தாய்லாந்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்றும் ஊர்வலமாகச் சென்றனர்.தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் ஆயிரக்கணக்கான சிவப்பு சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த இரு நாட்களாக பேங்காக்கில் மிகப்பெரிய ஊர்வலத்தை நடத்தினர்.ஆர்ப்பாட்டக்காரர்களின் இத்தகைய செயலால் பேங்காக் நகரமே ஸ்தம்பித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.பேங்காக் ஊர்வலத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் ரத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகப் பெரிய வெள்ளை நிறத் துணியில் மனித ரத்தத்தை பயன்படுத்தி அவர்கள் ஓவியங்களை வரைந்தனர்.சென்ற வாரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டக் காரர்கள் ரத்த தானம் மூலம் திரட்டிய ரத்தத்தில் இன்னும் 15 போத்தல்கள் மீதம் இருப்பதாகவும் அதனைப் பயன்படுத்தி ஓவியங்கள் வரையப் போவதாகவும் ஆர்ப்பாட்டத் தலைவர்கள் முன்னதாகக் கூறியிருந்தனர்.இத்தகைய ஓவியங்கள் வரைவதற்காகவே ஓவியர்களும் சிவுப்பு சட்டை ஆர்ப்பாட்டக் காரர்களும் வரவழைக்கப் பட்டதாக ஆர்ப்பாட்டக் காரர்களின் தலைவர் ஒருவர் கூறினார்.ஒரு பெரிய வெள்ளைத் துணியில் மனித ரத்தத்தைப் பயன்படுத்தி படங்கள் வரையவும் கவிதைகள் எழுதவும் அரசியல் வாசகங்கள் எழுதவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர்.“ஜனநாயகத்திற்காக நாங்கள் போராடுவதை உணர்த்துவதே இந்த ரத்த ஓவியப் போராட்டத்தின் நோக்கம்,” என்று ஆர்ப்பாட்டத் தலைவர்களில் ஒருவரான ஜடுபோர்ன் கூறினார்.தாய்லாந்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல் நடத்தப்படும் வரை தங்கள் போராட்டம் ஓயாது என்று ஆர்ப்பாட்டக் காரர்கள் கூறியுள்ளனர்.ஆர்ப்பாட்டக்காரர்களின் ரத்தப் போராட்டம் தங்கள் பொறுமையை சோதிப் பதாக தாய்லாந்துப் பிரதமர் அபிசித் விஜஜிவா கூறியுள்ளார்.அமைதியாக பேரணி நடத்துவதற்கு மட்டுமே அரசு அனுமதிக்கிறது என்றும் ரத்த ஆர்ப்பாட்டம் சட்டத்திற்கு புறம்பானது என்றும் அவர் கூறினார்.

தமிழ் முரசு(News)
yahoo.com(pict)

Monday, March 15, 2010